ஏப்ரல் 2ம் தேதி பெரம்பலூரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்! பயன்படுத்திக்கோங்க மக்களே...

 
அசத்தல் அறிவிப்பு!!  இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

திருச்சி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் தனியார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏப்ரல் 2ம் தேதி நடைபெற உள்ளதாக பெரம்பலூர்  மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க. உங்க நண்பர்கள், உறவினர்கள் என வேலைத் தேடுவோர்களிடம் இந்த தகவலை சொல்லி, அவங்களையும் பயன்படுத்திக்க சொல்லுங்க.

வேலை வாய்ப்பு முகாம்

இந்த வேலை வாய்ப்பு  முகாம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஏப்ரல் 2ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேப்பந்தட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

வேலை வாய்ப்பு முகாம்

வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள்  முதல் டிகிரி முடித்தவர்கள், கலை - அறிவியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்துள்ள 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் உள்ள வேலைதேடும் ஆண்,  பெண் இருபாலரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web