பெரும் சோகம்... கட்டுமான தளத்தில் லாரி டிரைவர் கொட்டகையில் மணலை கொட்டியதில் 5 தொழிலாளர்கள் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்னா மாவட்டத்தில் ஜாப்ராபாத் தாலுகாவில் உள்ள பசோடி-சந்தோலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணி நடைபெற்று வரும் அந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் சில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கட்டுமான தளத்தில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருப்பதை அறியாத லாரி டிரைவர் கொட்டகையில் மணலை இறக்கியுள்ளார். சிறுவன் உட்பட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!