பெரும் பதற்றம்... பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரரை சிறைப்பிடிப்பு!

 
 பெரும் பதற்றம்... பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரரை சிறைப்பிடிப்பு!  

இந்தியாவில் நேற்று முன் தினம் திடீரென பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்.பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை உடனடியாக நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இந்தியாலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 பெரும் பதற்றம்... பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரரை சிறைப்பிடிப்பு!  

அதே நேரத்தில் நதிநீர் பங்கீடு, மருத்துவ வசதி நிறுத்தப்பட்டுள்ளன. வான்வழி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவரான இந்திய பாதுகாப்புப் படை வீரர் பி.கே. சிங்கிடம் இருந்து ரைஃபில்கள், தோட்டாக்கள், தண்ணீர் பாட்டில்கள் அனைத்தையும்  பாகிஸ்தான் ராணுவத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பி.கே.சிங் என்ற வீரரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web