மகளைக் கொன்று விட்டு ஊராட்சி செயலாளர் தற்கொலை!

 
தனுஜா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த பெருமாங்குப்பம் பகுதியில் மு.பாபு (48)- வேண்டாலட்சுமி தம்பதி வசித்து வந்தனர். இதில் மு.பாபு காங்குப்பம் ஊராட்சி செயலாளராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி மாச்சனூரில் அங்கன்வாடி பணியாளராக வேலைபார்த்து வருகிறார். 

இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தன.மூத்த மகள் லோசினி (18) வேலூரில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகள் தனுஜா (16) மனவளர்ச்சி குன்றியவர். தனுஜா சில நேரங்களில் எங்கு செல்கிறார், என்ன செய்கிறார் என தெரியாது. பின்னர் அவரை உறவினர்கள் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவருவர்.

தனுஜா

தனுஜா 16 வயதை எட்டிய நிலையில், மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதும், என்ன செய்கிறோம் என தெரியாமல் அவரது செயலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனுஜாவை, தந்தை பாபு கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, அவரும் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனுஜா
இது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவரது மனைவி, மற்றொரு மகள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீசார் விரைந்து சென்று பாபு, தனுஜா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web