“அவ இல்லாம வாழ்க்கையில்ல”... மனைவியின் திடீர் மரணம்... 2 குழந்தைகளையும் கொன்று விட்டு கணவன் தற்கொலை!

 
பெரும் சோகம்... காதல் மனைவி திடீர் மரணம்... 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்து தந்தை தற்கொலை! 

“அவ இல்லாமல் வாழ்க்கையில்லை” என்று காதலித்து கரம் பிடித்த மனைவி திடீரென மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்து விட்டு கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் உதய் . 35 வயதாகும் இவர், ஹேமா என்கிறப் பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், கடந்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் சிந்து ஸ்ரீ என்ற மகளும், 3 வயதில் ஸ்ரீ ஜெய் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹேமா மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் உதய் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.  

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

தன்னுடைய காதல் மனைவியின் இழப்பை அவரால் ஏற்றுக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவர் திடீரென தன்னுடைய இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் வீட்டின் சுவரில் ஐ லவ் யூ ஹேமா என ரத்தத்தில் எழுதியுள்ளார். 

பள்ளி மானவி தற்கொலை

இதனைத்தொடர்ந்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த விபரங்கள் தெரிய வந்தன. இது குறித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web