பெரும் சோகம்.. அதிகாலையில் பயங்கர அலறல் சத்தம்.. சம்பவ இடத்திலேயே 5 பேரும் பலி

 
ஆயிஷா

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ஆடங்கியைச் சேர்ந்த சமாந்தர் வாலி காவல்துறை உதவி ஆய்வாளராக உள்ளார். இவர், சிவராத்திரியை முன்னிட்டு தனது மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் இருவருடன் காரில் சின்னகஞ்சம் நகரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்றிருந்தார்.

கோவிலில் சிவராத்திரி சாமி தரிசனம் முடித்த பின்னர் சமாந்தர், அதிகாலையில் மனைவி, மகள் மற்றும் உறவினர்களை வீட்டுக்கு காரில் அனுப்பி வைத்துள்ளார். சமாந்தருக்கு சின்னகஞ்சம் நகரில் பணி இருந்ததால் அவர் அங்கிருந்து நேரமாக பணிக்கு சென்றுவிட்டார்.

ஆயிஷா

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் பயணித்த கார் மேதர்மிட்லா நெடுஞ்சாலை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. காரை தொடர்ந்து பின்னால் வேகமாக வந்த லாரியும் கார் மீது வேகமாக மோதியது. இதில் கார் இழுத்துச்செல்லப்பட்டு தூக்கிவீசப்பட்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உள்ளிட்ட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற ஆடங்கி போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபட்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் வஹீதா (39), ஆயிஷா (9), குர்ராலா ஜெயஸ்ரீ (50), குர்ராலா திவ்யா தேஜா (27), மற்றும் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டனர். 

ஆயிஷா

மனைவி, மகள் சாலை விபத்தில் உயிரிழந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சமாந்தர் கதறி அழுதார். இது அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web