பெரும் சோகம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!

 
தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் காதல் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமணன்.
suicide
இவருக்கு கமலா என்ற மனைவியும் நாகஜோதி என்ற மகளும் உள்ளனர். இதில் நாகஜோதி அருகில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். நாகஜோதி தனது தாய் மாமாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஒரு நாள் அவர் கல்லூரிக்கு செல்லாமல் தாய்மாமாவுடன் திருச்செந்தூருக்கு சென்றுள்ளார். அதை தெரிந்து கொண்ட தந்தை ரமணன், அவர் வீட்டிற்கு வந்த பிறகு இது குறித்து பேசியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் எழுந்த பிரச்சியில் ரமணன், கமலா மற்றும் நாகஜோதி மூவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர்.
police
இது குறித்து , தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web