அனைத்து மாவட்டங்களிலும் “ பசுமை மயானங்கள்”!! கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு!!
உயிரிழந்த மக்கள் உடல்களை மேலும் சிரமத்திற்கு ஆளாக்காத வகையில் மயானங்கள் பசுமையாக, தூய்மையாக, நேர்த்தியாக பராமரிக்கப்பட வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பசுமை மயானங்கள் மற்றும் சுடுகாடுகளை அமைக்கும் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது. பல இடங்களில் உள்ள மயானம் மற்றும் சுடுகாடுகள் முறையாக பராமரிக்கப்படாமல், அடிப்படை வசதிகள் கூட எதுவுமின்றி உள்ளது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் அதாவது குறிப்பாக நகர்ப்புறங்களில் சுகாதாரமின்றி தூய்மையற்றதாக மயானங்கள் திகழ்கின்றன.
மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை நட்டு , தண்ணீர் வசதி மற்றும் கொட்டகை அமைத்து 'பசுமை மயானங்களை' உருவாக்கலாம். இந்த வசதிகளை வழங்க உங்கள் பகுதியில் உள்ள சேவை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் துறையின் சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நிச்சயமாக மயானங்கள் மற்றும் எரியூட்டும் இடங்களின் ஒட்டுமொத்த சூழலை மேம்படுத்திவிடும்.
அவரவர் வசிக்கும் மாவட்டங்களில் ஒரு சிறந்த மயானத்தை உருவாக்கவோ, அதனை பொலிவு பெறச் செய்வதிலோ முயற்சியை முன்னெடுக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டின் பிம்பத்தையும் மேம்படுத்த இது பெரிதும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சுவர் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை நடுவதன் மூலம், மக்கள் அமரவும், தண்ணீர் வசதி மற்றும் கொட்டகை அமைத்தும் ‘பசுமை புதைகுழிகளை’ உருவாக்கலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் புதைகுழிகள் மற்றும் எரியும் காடுகளின் ஒட்டுமொத்த சூழல் மேம்படுத்தப்படும். இறந்த ஆத்மாக்களுடன் வரும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!