நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை குறைதீர்க்கும் முகாம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
ரேஷன்கார்டு குறைதீர்க்கும் முகாம்

தமிழகத்தில் மானிய விலையில் உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயரில் திருத்தம் செய்ய மாதம் தோறும் மண்டல வாரியாக குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை சென்னையில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்க்க, நீக்க குறைதீர் முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அந்தந்த மண்டல அலுவலங்களில் முகாம் நடத்தப்படும் என நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

குறை தீர்க்கும் முகாம்
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆணையாளர்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மே 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை  மே 13ம் தேதி சனிக்கிழமை  காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

ரேஷன் விரல் பதிவு கைரேகை
இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும்,ரேஷன்கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள்  இருப்பின் அவற்றை தெரிவிக்கலாம். இந்த முகாமில் அளிக்கப்படும் புகார்கள் விரைவில் தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web