அரசு பேருந்து ஓட்டுநரின் முகத்தில் கும்மாங்குத்து.. பள்ளி மாணவன் அடாவடி!

 
பாலாஜி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்தில் வயதானவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் பயணித்துள்ளனர். பேருந்தை பாலாஜி என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். பாண்டியநல்லூர் அடுத்த போடப்பாறை அருகே பேருந்து சென்றபோது, 11ம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன் படியில் தொங்கியவாறு பயணித்துள்ளார். 

பாலாஜி

இதனை கண்ட ஓட்டுநர் பாலாஜி, மாணவனை கண்டித்துள்ளார். மேலும் பேருந்து உள்ளே வந்துநிற்குமாறும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் திடீரென ஓட்டுநரை தாக்கினார். பேருந்து ஓடிக் கொண்டு இருக்கும்போதே மாணவன் தாக்கியதால் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். அவரால் எதுவும் செய்யஇயலவில்லை. 

மேலும், மாணவன் கையில் இரும்புபோன்ற ஒரு பொருளை வைத்து தாக்கியதில் ஓட்டுநரின் நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அந்த மாணவன் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளான். எனினும் பேருந்தில் இருந்த பயணிகள் பிடித்து வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்,  மாணவனை பிடித்து அழைத்து சென்றனர். மேலும் மாணவனின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்தனர்.

பாலாஜி

நெற்றியில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் இருக்கும் அரசு பேருந்து ஓட்டுநரின் வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web