அமெரிக்கா கடத்தப்பட்ட நடராஜர், சோமஸ்கந்தர் சிலைகளை தமிழகத்திடம் ஒப்படைக்க முடிவு!
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகள் இந்தியாவுக்கு ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதில் நடராஜர் வெண்கல சிலை, சோமாஸ்கந்தர் சிலை மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த சுந்தர்-பரவை நாச்சியார் சிலை அடங்கும்.
அமெரிக்காவின் ஸ்மித்സோனியன் தேசிய அருங்காட்சியகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த சிலைகள் தமிழக கோயில்களில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டதை உறுதி செய்து, தீவிர ஆராய்ச்சி, ஆவண ஆய்வு பிறகு இந்தியாவிற்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களில் நடராஜர் சிலையை நீண்டகால அடிப்படையில் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த இந்தியா அனுமதி பெற்றுள்ளது. இந்த சிலைகள் தமிழ்நாட்டின் கலையின்மை, நுணுக்கம், புனிதத்தன்மை போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. வழக்கமாக கோயில் விழாக்களில் மக்கள் அவற்றை வழிபட்டு வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
