ப்ரெண்டுக்கு பர்த்டே... வாழ்த்தி பேனர் வைக்க முயன்ற 2 மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன்(15). திருநகரைச் சேர்ந்தவர் தனுஷ்குமார்(17). இவர்கள் இருவரும் சில இளைஞர்களுடன் இணைந்து, மணலூர்பேட்டை சாலையில் தங்களது நண்பரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது டிஜிட்டல் பேனரில் உள்ள இரும்புக் கம்பி அருகேயுள்ள மின்மாற்றியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து லோகேஸ்வரன், தனுஷ்குமார் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற திருவண்ணாமலை நகர போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விட்டு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
தனுஷ்குமார் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!