பரபரப்பு... தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி!

 
கன்னியாகுமரி

 தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து மங்களூரு நோக்கி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. 

ரயில் தண்டவாளம் நடைமேடை ப்ளாட்ஃபாரம்
இந்நிலையில் ரணியல் ரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது, அங்கு ரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது.  இதைப் பார்த்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ரயில்

இதனைத் தொடர்ந்து தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பிறகு சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தண்டவாளத்தில் கற்களை வைத்தவர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?