பரபரப்பு... தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைத்து ரயிலை கவிழ்க்க சதி!

 
 பரபரப்பு... தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைத்து ரயிலை கவிழ்க்க சதி!
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது. அரக்கோணம் அருகே மேல்பாக்கம் வளைவு பகுதியில் 5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்து  ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. 

சம்பவ இடத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கல் மற்றும் இரும்பு போல்ட் உடனடியாக அகற்றப்பட்டது. இதன் பிறகு  திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ரயிலை கவிழ்ப்பதற்கு சதியா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் தகவல் கிடைத்ததால் திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web