நீட் பரிதாபங்கள்... வெள்ளி அரைஞாண் அணிந்திருந்த மாணவர் தேர்வெழுத அனுமதி மறுப்பு!

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி என ஆறு தேர்வு மையங்களில் 3,120 மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதினர்.
நீட் தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.தேர்வு எழுதக்கூடிய மாணவிகள் காதுகளில் கம்பல் ஏதும் அணியாமலும் ஜடை ஏதும் போடாமலும் தேர்வு மையங்களுக்குள் அனுமதித்தனர்.
மாணவர்கள் பெல்ட் அணியாமலும், வெள்ளி அரைஞாண் கயிறு உள்ளதா? என சோதனை செய்து அனுமதிக்கப்பட்டனர். வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருக்கும் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெற்றோரே வெள்ளி அரைஞாண் கயிற்றை அகற்றிய பிறகு மாணவன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!