அதிர்ச்சி... மாணவிகள், பேராசிரியைகளை ஆபாச வீடியோ... உடற்கல்வி ஆசிரியரின் உல்லாச லீலை!

 
ஆ

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையில் வசித்து வருபவர்  சுந்தர்சிங் . இவர்  கன்னியாகுமரியில்  தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து  வருகிறார்.  பள்ளிக்கூடத்தின் அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் இதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியிடம்  பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.  
இந்தபுகாரின் பேரில்  வழக்குபதிவு செய்யப்பட்டு  போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர்சிங்கை கைது செய்தனர்.பின்னர் அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய மொபைல் போனை  கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பாலியல் வன்கொடுமை

 இதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் படங்கள் இருந்தது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து   போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சுந்தர்சிங் ஆசிரியர் என்ற போர்வையில்  மாணவிகள் உட்பட பல இளம்பெண்களிடம் பழகி வந்தார்.அவர்களிடம் வீடியோ காலில் பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். வீடியோ காலில் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி ஆபாசமாக நிற்க கூறி அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டுள்ளார்.

போக்சோ நீதிமன்றம்

பள்ளி  மாணவிகள் அவர்களின் தாயாரையும் விட்டு வைக்கவில்லை. அதிலும்   குறிப்பாக கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஆபாசமாக படம் வீடியோ எடுத்து பதிவு செய்து கொண்டார்.  அத்துடன் பள்ளியில் பணிபுரிந்து வரும்  பல ஆசிரியைகளுக்கும் வலை விரித்துள்ளார். கல்லூரிகளில்   பேராசிரியைகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு அவர்களுடன் செல்போனில் வீடியோ காலில் அத்துமீறிய காட்சிகளும்  நடந்துள்ளன. இதனையடுத்து இவரது செல்போன் சைபர் கிரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . இந்த வீடியோக்களில் பதிவாகியிருக்கும் பெண்களிடம் புகார் வாங்கவும் சைபர் க்ரைம் முடிவு செய்துள்ளது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web