மனைவி , மகளை கொன்று தானும் தற்கொலை முயற்சி!! கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

 
ஐஸ்வர்யா

சென்னையை அடுத்த தாழம்பூரில்  தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்  32வயது அரவிந்த் . இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.   அரவிந்த்துக்கு  17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள  அரவிந்த் முடிவு செய்தார்.   அவருடைய 7வயது மகள் ஐஸ்வர்யாவுக்கும் , மனைவிக்கும்  மாத்திரை கொடுத்துவிட்டார்.

விஷம்

இதன் பிறகு மனைவியின்   வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்தார்.   அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு அவரது கை நரம்பையும்   அறுத்து கொண்டார்.   உறவினர்கள் அரவிந்த்க்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால்   காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அரவிந்த் மயங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையிலும் இருந்தனர்.  

போலீஸ்

போலீசார் உடனடியாக அரவிந்த்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை தாங்க முடியாமல் வேறு வழியின்றி  குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web