திருட சென்ற இடத்தில் தூக்கிட்டு தற்கொலை.. போலீசுக்கு பயந்து திருடன் எடுத்த விபரீத முடிவு..!!
வேலூர் சேண்பாக்கம் ஜீவதெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 45). இவர் வேலூரில் உள்ள ஒரு வீட்டில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காமேஸ்வரன் (17), தியாகு (15) என்ற 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் (தியாகு) உடல்நிலை காரணமாக நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தியாகு மதியம் 2 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள நண்பர்களுடன் விளையாட சென்றதாக தெரிகிறது. பின்னர் மாலை 4 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு மாயமாகியிருந்தது. மேலும் மற்றொரு கதவு திறந்து கிடக்கிறது. அதையடுத்து தியாகு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் மர்ம நபர் ஒருவர் இருந்துள்ளார். யார் நீ? அவர் கேட்டார். உங்கள் உறவினர் என்று மர்ம நபர் கூறினார்.
சந்தேகமடைந்த தியாகு வெளியே சென்று கதவை பூட்டினார். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார். பின்னர், தனது தாயாருக்கு போன் செய்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். இந்நிலையில், லட்சுமி உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது மர்ம நபர் யார் என்று தெரியாததால் அவர் வீட்டில் திருட வந்தது தெரியவந்தது. உடனடியாக லட்சுமி வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் தொலைபேசியில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர், பூட்டியிருந்த கதவை போலீசார் திறந்து பார்த்தபோது, வீட்டுக்குள் மர்ம நபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் கஸ்தம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்டவர் திருப்பத்தூர் மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்த பூபதி ஜோகூர் (45) என்பதும், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட பூபதி மீது வேலூர் வடக்கு, உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
லட்சுமி வீட்டில் திருடச் சென்றபோது, அங்கு சிக்கிக் கொண்டார். பின்னர் போலீஸ் பிடியில் சிக்கிவிடுவோம் என பயந்து வீட்டில் இருந்த சேலையை எடுத்து வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!