விஜய், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்தவர்... மாரடைப்பால் நடிகை பெருமாயி காலமானார்!

 
பெருமாயி

மாரடைப்பால் நடிகை பெருமாயி இன்று காலமானார். அவருக்கு வயது 73. இவர் நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பெருமாயி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாயி. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு’ என்கிற சின்னத்திரை தொடர் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். 

எப்போதும் தண்டட்டியுடன் காணப்படும் இவர் அதன் பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, விஜய்யின் வில்லு உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

பெருமாயி

உடல்நல குறைவு காரணமாக சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web