சிறுமிகளை ஆபாச வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற இளைஞர்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
விகடர் ஜேம்ஸ் ராஜா

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விகடர் ஜேம்ஸ் ராஜா (32).   தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் தனது தந்தையின் மெயிலில் இருந்து பிரதமர் பற்றி அவதூறு கருத்துக்களை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகளால், கடந்த 15ஆம் தேதி விகடர் ஜேம்ஸ் ராஜா கைது செய்யப்பட்டார். இவரை மூன்று நாட்கள் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆபாச வீடியோ

தனியார் கல்லூரியில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட வந்த விக்டர் ஜேம்ஸ், தனது வீட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். தன்னிடம் படிக்க வரும் சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டி வந்துள்ளார் என்பது அம்பலமானது.

இதனிடையே, இதுபோன்று நாட்டில் பல்வேறு இடங்களில் ஆபாச படம் எடுக்கப்பட்டதாக இண்டர்போல் போலீசார், சிபிஐ-க்கு புகார் அளித்தது.இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 21 இடங்களில் விசாரணை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஆராய்ச்சி மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

விகடர் ஜேம்ஸ் ராஜா

பின்னர், அவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், போக்சோ சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தஞ்சாவூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web