இளைஞர் தீக்குளிக்க முயற்சி !! கலெக்டர் அலுவகலத்தில் பரபரப்பு!!

 
லிங்கமூர்த்தி

கடலூர் கலெக்டர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொது மக்கள் பலரும் தங்கள் கோரிக்கை மனு அளித்தனர். சில நேரங்களில் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதால், ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடிய மக்களை முகப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்துகின்றனர்.  அவர்களிடம் விபத்து, காயம் ஏற்படுத்தக்கூடிய வகையிலான பொருட்களை இருந்தால் அதனை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பர். மற்றபடி பொதுமக்கள் அனுமதித்து வந்தனர்.

லிங்கமூர்த்தி

இந்நிலையில் இளைஞர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அவரை போலீசார் சோதனையிட முயன்றபோது, அந்நபர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த இளைஞரை மடக்கிபிடித்த போலீசார், அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பிடித்துச்சென்று விசாரணை நடத்தியபோது, பண்ருட்டி மருங்கூர் கிராமத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி (27) என்பதும், இவருடைய மனைவி மற்றும் 6 மாத குழந்தையை அவரது சகோதரர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் தெரியவந்தது. இவர்களை மீட்டு தர வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சித்தது போலீசாருக்கு தெரியவந்தது.

லிங்கமூர்த்தி

தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web