நெஞ்சை பதற வைக்கும் வீடியோ... வேகத்தடையில் உட்கார்ந்து விளையாடும் குழந்தை!

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் குக்கட்பல்லி வடேபள்ளி என் கிளேவில் குக்கட் பள்ளி என்னும் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு வீதியில் அமைந்துள்ள ஸ்பீட் பிரேக்கரில் இரண்டரை வயது குழந்தை அதித்ரி அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் தனது வாகனத்தை எடுத்துவிட்டார்.
அவர் குழந்தை இருந்ததை கவனிக்காமல் சென்றதால் குழந்தை காரின் கீழ் சிக்கிக் கொண்டது. இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் பதறித்துடித்து உடனடியாக அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
A two-year-old girl, Adrithi, died after being run over by a car at Kukatpally's Vaddepalli Enclave following the driver's negligence.
— The Siasat Daily (@TheSiasatDaily) March 21, 2025
The heartbreaking incident took place on March 16, when the child went out to play and sat over a speed breaker on the road. The driver, not… pic.twitter.com/49TOg5K1N3
அங்கு அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் அதிவேகம் மற்றும் கவன குறைவு ஆகியவற்றிற்கு எதிராக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!