உருக வைக்கும் வீடியோ எங்கடா போயிட்ட மக்கா உரிமையாளரை பார்த்ததும் கட்டியணைத்த நாய்!

நாய்கள் எப்போதுமே பாசக்கார பயல்கள். உரிமையாளரை கொண்டாடித் தீர்க்கும் நடுவில் 2 நாள் ஊருக்கு போய்வந்தாலே கட்டியணைத்து வாலை ஆட்டி அன்பை வெளிப்படுத்தும். டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது செல்ல நாய் சார்லியை பாசமாக வளர்த்து வந்தார். ஆனால் ஒருநாள் அந்த நாய் திடீரென காணாமல் போய்விட்டது.
மனமுடைந்த இளைஞர் சார்லியை தேடுவதற்காக நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டிக் காணொலி விளம்பரங்கள் கொடுத்திருந்தார். பல இடங்களில் விசாரித்தும் பலனின்றி தேடிக்கொண்டிருந்தார். திடீரென ஒருவர் சார்லி உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இருப்பதாக தகவல் அளித்தார்.
உடனே அங்கு சென்ற நிலையில் உரிமையாளரை கண்ட சார்லி ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்து தனது பாசத்தை வெளிப்படுத்தியது. அந்த நெகிழ்ச்சிகரமான தருணத்தை அருகிலிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, மனிதனுக்கும் நாய்க்கும் இடையே உள்ள பாசத்தின் பிணைப்பை வெளிப்படுத்துகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!