பிரபல நடிகர் திடீர் கைது!! சர்ச்சை பதிவால் வந்த வினை!! ரசிகர்கள் கொந்தளிப்பு !!

 
நடிகர் சேத்தன்

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சேத்தன். அண்மையில் பிரதமர் மோடி கர்நாடகாவின் மண்டியாவுக்கு வந்தார். பிரதமரின் வருகையையொட்டி அங்கு உரிகவுடா, நஞ்சேகவுடாவின் உருவச்சிலைகளை பாஜகவினர் அமைத்திருந்தனர். அவர்கள் இருவரும் திப்புசுல்தானை கொன்றவர்கள் என்று கூறப்படுகிறது.

நடிகர் சேத்தன்

இது அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் உரிகவுடா, நஞ்சேகவுடா ஆகியோர் குறித்து நடிகர் சேத்தன் தனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் இந்துத்துவா குறித்தும் கருத்து பதிவிட்டு இருந்தார்.

அந்த ட்விட்டர் பதிவில், இந்துத்துவ அரசியல் என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. ‘ராவணனை ராமன் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பியபோது இந்திய தேசத்தை தொடங்கினார். பாபர் மசூதியில் ராமர் பிறந்தார் என்பதும் திப்பு சுல்தானை கொன்றவர்கள் ஊரிகவுடா-நஞ்சேகவுடா என கூறுவதும் பொய் ஆகும். பொய்களால் கட்டமைக்கப்பட்ட இந்துத்துவ அரசியலை உண்மையால் தோற்கடிக்க முடியும்,  என விமர்சித்திருந்தார்.

நடிகர் சேத்தன்

இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த பஜ்ரங் தளம் நிர்வாகி குமார் சேஷாத்ரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், நடிகர் சேத்தனை உடனடியாக கைது செய்தனர். பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, அவரை சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web