தூத்துக்குடி, தென்காசி உட்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

 
மழை
 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை குமரிக்கடல் நோக்கித் தாறுமாறாக நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து மேற்கு–வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 22ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் அது வலுப்படும் வாய்ப்பும் உள்ளது.

மழை

இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை, மேலும் திருநெல்வேலி மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களிலும் தனித்தனியான மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை கனமழை வெதர்மேன்

19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களில் மழை தொடரும் நிலையில், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் பலம் பெறக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!