தூத்துக்குடியில் சூறைக்காற்றுடன் கனமழை... வீடு, பயிர்கள் சேதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பேய்க்குளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வீடு, பயிர்கள் சேதம் அடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் முப்பது நிமிடங்கள் பெய்த மழையில் பால்ராஜ் என்பவரது வீட்டின் மேற்கூரை காற்றில் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்தது.
இதே போல் அவரது வயலில் பருத்திப் பயிர்கள் நல்ல நிலமையில் இருந்த நிலையில் காற்றில் செடிகள் அனைத்தும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த வீட்டிற்கும் பயிர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!