இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (17-12-2025) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (18-12-2025) தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளது. அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம். வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

19-12-2025 முதல் 22-12-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். இந்த நாட்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதனைத் தொடர்ந்து 23-12-2025 அன்று தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மீண்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில், இன்று பொதுவாக பெரிய மாற்றம் இருக்காது. இருப்பினும் சில இடங்களில் சற்று குறைவாக இருக்கலாம். 18 முதல் 21-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்சம் 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். நாளை அதிகாலை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
