தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை... மஞ்சள் அலர்ட்... இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கும்... வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிக வெயில் காரணமாக மக்கள் வெளியில் செல்வதற்கே தயங்கி வருகிறார்கள். கோடைக்காலம் தொடங்கி விட்டதால் வெயில் பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்கீட்டை தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் சந்தோஷம் தரும் செய்தியாக இன்று ஏப்ரல் 3ம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த தமிழகத்தில் இன்று ஏப்ரல் 3ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று ஏப்ரல் 3ம் தேதி 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் வருகின்ற ஏப்ரல் 4, 5ம் தேதிகளில் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை” என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!