13 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு!

 
மழை
 

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் ஆட்டோ கனமழை மழை

இந்த நிலையில், தமிழகத்தில் இரவு நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை கனமழை

மேலும் ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!