டிசம்பர் 15 வரை பல பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை, காரைக்காலில் இடி–மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழக பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படலாம்.

12 முதல் 14-ம் தேதி வரை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் மழை தொடரும். காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15, 16 தேதிகளில் மீண்டும் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.சென்னையைப் பொறுத்தவரை, இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
