தமிழகத்தில் இன்று முதல் டிச.20 வரை மழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை, டிசம்பர் 15) முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், இன்று (டிசம்பர் 15) தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிடக் குறைவாக இருந்த நிலையில், இன்று மற்றும் நாளை (டிச. 15, 16) ஆகிய நாட்களிலும் வெப்பநிலை இயல்பைவிடக் குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு இருப்பதோடு மட்டுமல்லாமல், அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மாற்றம் காரணமாகக் கடல் பகுதியில் காற்று வேகமாக வீசும் என்பதால், மீனவர்களுக்குச் சில எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன:
டிசம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தக் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
