பெரும் சோகம்... மருத்துவ கல்லூரியில் யுபிஎஸ் அறையில் மின்கசிவால் கடும் புகைமூட்டம்... மூச்சுத் திணறலால் 4 பேர் பலி !

 
kerala
 


கேரளா மாநிலத்தில்  கோழிக்கோட்டில் அமைந்த மருத்துவ கல்லூரியில் நேற்று மே 2ம் தேதி இரவு 8 மணிக்கு  யு.பி.எஸ். அறையில் மின்கசிவு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன் தொடர்ச்சியாக புகைமூட்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால், மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு  4 பேர் பலியாகி உள்ளனர். 

இதுகுறித்து  எம்.எல்.ஏ. சித்திக் கூறும்போது, வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியில் வசித்து வருபவர் 44 வயது   நசீரா  என்பவர் உயிரிழந்து உள்ளார் என உறுதிப்படுத்தினார். அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்தபோது, புகைமூட்டம் அதிகரித்தது. 

இதனால், வேறு இடத்திற்கு அவரை கொண்டு செல்ல முயற்சித்தபோது சிகிச்சை பலனின்றி  பலியானார். அந்த மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் பலரும், மருத்துவ உபகரணங்களுடன் வேறு பகுதிக்கு தூக்கி செல்லப்பட்டனர். இந்நிலையில், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக  மருத்துவமனையின் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web