அமைச்சர் பொன்முடியைக் கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.. 293 பேர் கைது!

நெல்லை டவுனில் அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த 68 பெண்கள் உட்பட 293 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்துக்கள் புனிதமாக அணியும் விபூதி பட்டை திருநாமத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலக வலியுறுத்தியும், அவரை கைது செய்யக் கோரியும் நெல்லை மாநகரில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் மாயகூத்தன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 68 பெண்கள் உட்பட 293பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!