கல்லூரியில் ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் அமைந்திருக்கும் கல்லூரியில் ஹோலி நிகச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆசிரியர்களை அறைக்குள் வைத்து பூட்டி சிறைப்பிடித்துள்ளனர்.இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரிலுள்ள 133 ஆண்டுகள் பழமையான ஹோல்கர் அரசு அறிவியல் கல்லூரியில், மார்ச் 7 அன்று ஹோலி கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நுழைவுக்கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, ஹோலி நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன் அதனை மொத்தமாக ரத்து செய்ததினால் ஆத்திரத்தில் மாணவர்கள் நேற்று பிப்ரவரி 24ம் தேதி திங்கட்கிழமை அறையில் கூடியிருந்த ஆசிரியர்களை உள்ளே வைத்து வெளியே தாழிட்டு பூட்டு போட்டுவிட்டார். அந்த அறையினுள் மின்சாரத்தையும் துண்டித்த அவர்கள் ஆசிரியர்களை நோக்கி கோஷங்களை எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் அரை மணிநேரம் அந்த அறையினுள் பூட்டப்பட்டிருந்த கல்லூரி பணியாளர்களில் ஒருவர் அந்த அறையின் ஜன்னல் வழியாக வெளியே வந்து அந்த பூட்டை திறந்து ஆசிரியர்களை விடுவித்துள்ளார்.இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் அக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் அனாமிகா ஜெயின் புகார் அளித்துள்ளார். தற்போது வரை இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!