இன்று முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை... இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் விழா கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியிருக்கிறது.
பொங்கல் பண்டிகை நாளை 15-ந்தேதியும், மாட்டுப் பொங்கல் 16-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொங்கல் பண்டிகை காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 14-ந்தேதி போகிப் பண்டிகை முதல் விடுமுறை தொடங்குகிறது. 
அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் இன்று 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்கள் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.

தொடர்ந்து, 19-ந்தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
