ஹனிமூனில் விபரீதம்... காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற புதுமணப்பெண்!
ராஜஸ்தானில் புதுமணத் தம்பதி ஆஷிஷ் – அஞ்சு கடந்த சில நாட்களுக்கு முன் வாகன விபத்தில் சிக்கியதாக தெரிய வந்தது. ஆரம்பத்தில் ஆஷிஷ் பலியானதாகவும், அஞ்சுவின் நகைகள் திருடப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதனை முற்றிலும் மாற்றி வைத்தது.

அறிக்கையில் ஆஷிஷ் தனது மனைவியால் திட்டமிட்டு கொல்லப்பட்டதை உறுதி செய்தது. போலீசார் அஞ்சுவை விசாரணை செய்த போது, அஞ்சு தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது உண்மையாக வெளிவந்தது. இதனால் சம்பவம் நாட்டை உலுக்க வைத்துள்ளது.
திருமணமாகி சில நாட்களுக்குள் காதலனுக்காக கணவரை கொன்ற அஞ்சு செய்த துரோகம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மேகாலயாவில் நடந்த ‘ஹனிமூன் கொலை’ வழக்கை நினைவுகூர்ந்து இதனை ஒப்பிட்டு பேசிக்கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
