கோர விபத்து!! சொகுசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதல் !! 2 பேர் பலி!!

 
சொகுசு பேருந்து

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சொகுசு பஸ் ஒன்று  ஊட்டிக்கு அதிவிரைவாக சென்று கொண்டிருந்தது. சேலம் மாவட்டம்  அருகே சென்று கொண்டிருந்த போது மேச்சேரியில் இருந்து தொப்பூருக்கு லாரி ஒன்றும் எதிர்புறத்தில்  அதி வேகமாக வந்து கொண்டிருந்தது. சின்னப்பையன் என்பவர் லாரியை  ஓட்டி வந்தார். அவருடன் முத்துசாமி ஆறுமுகம் மற்றும் செந்தில் அனைவரும் உடன் இருந்தனர்.

விபத்து

அங்கிருந்து முக்கிய  சாலையை கடக்கும்போது எதிரே வந்த சொகுசு பேருந்து ஒன்று லாரி மீது பலமாக மோதியது. இந்த கோரவிபத்தில் லாரியை ஓட்டி வந்த சின்னப் பையனும், முத்துசாமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.அவர்களுடன் பயணம் செய்த  ஆறுமுகம், செந்தில் இருவரும் படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ்

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த விபத்துகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  நேற்று இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web