கொடூரம்... இப்படி கூடவா அடிப்பாங்க... மாணவியை அடித்த ஆசிரியை பணியிடை நீக்கம்!
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 2ம் வகுப்பு மாணவி ஒருவரைக் குச்சியால் தாக்கிப் பலத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியை, துறை ரீதியான விசாரணையைத் தொடர்ந்து உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்புப் படித்து வரும் ஷாஷினி (7) என்ற சிறுமியை, ஆசிரியை பெரியநாயகி என்பவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, கடந்த நவம்பர் 7ம் தேதி பிரம்பால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் சிறுமியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாகத் திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், காயம் குணமடையாததால், நவம்பர் 21ம் தேதி கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டார்.
சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்குக் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். பெற்றோர்கள் ஆரம்பத்தில் புகார் அளிக்காத நிலையில், மருத்துவமனை வாயிலாகவே சம்பவம் வெளியானது.
சூலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் அனுமதி பெற்று, ஆசிரியை பெரியநாயகி மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்துக் கல்வித் துறையின் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஆசிரியை பெரியநாயகி மீது நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
