பகீர் காட்சிகள்... மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இன்று மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அடுத்தடுத்து மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்த நிலையில் சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மியான்மர் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம் குறித்து இந்திய பிரதமர் மோடி தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார். மக்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார். அந்த அரசுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், உதவிப் பணிகளுக்காக இந்திய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!