10 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.... பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!

 
 10 தீவிரவாதிகளின்  வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.... பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி!

இந்தியாவில் காஷ்மீரில் ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட திடீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய  ராணுவம் இறங்கியுள்ளது.  அந்த வகையில் ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.  
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது இந்தியா தனது அடக்குமுறையைத் தீவிரப்படுத்திய நிலையில், பந்திபோரா, புல்வாமா மற்றும் ஷோபியன் மாவட்டங்களில் 3 தீவிர பயங்கரவாதிகளின் வீடுகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கியிருப்பதாக  அதிகாரிகள்  தெரிவித்தனர்.


நேற்றைய தினம் பயங்கரவாதிகள் 4 பேரின் வீடுகளை குண்டுவைத்து ராணுவம் தகர்த்துள்ளது. இதையும் சேர்த்து இதுவரை மொத்தம் 10 தீவிரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன.  தாக்கத்தால் நடத்தப்பட்ட  அடுத்தடுத்த நாட்களில் 10 உள்ளூர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் இடித்துள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அதிரடி நடவடிக்கையில் அடில் குரீ என அழைக்கப்படும் அடில் உசேன் தோக்கர், அவந்திபோராவில் ஆசிப் ஷேக் மற்றும் புல்வாமாவில் அஹ்சன் ஷேக் ஆகியோரின் வீடுகளும் இடிக்கப்பட்டன.  
அதன்படி, இதுவரை வீடுகள் இடிக்கப்பட்ட பயங்கரவாதிகளில் லஷ்கர்-இ-தொய்பாவின் அடில் ஹுசைன் தோக்கர், ஜாகிர் அகமது கனாய், அமீர் அகமது தார் மற்றும் ஆசிப் ஷேக், ஷாஹித் அகமது குட்டே, அஹ்சன் உல் ஹக் அமீர், ஜெய்ஷ்-இ-முகமதுவின் அமீர் நசீர் வானி, ஜமீல் அகமது ஷேர் கோஜ்ரி, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின் அட்னான் சஃபி தார் மற்றும் ஃபரூக் அகமது டெட்வா ஆகியோர் அடங்குவர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web