இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... மீண்டும் உயர்ந்த பாலின் விலை !
தமிழகத்தில் பால் உற்பத்தியை பொறுத்தவரை 84% தனியார் நிறுவனங்களிடம் தான் உள்ளன. இதனால் அடிக்கடி பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தி வருகின்றனர். தனியார் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் ஆரோக்கிய பாலின் விலையை 1 லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் 1 கிலோவிற்கு 3 ரூபாயும் சமீபத்தில் உயர்த்தியது.

இந்த விலை ஏற்றம் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பால் விலை உயர்த்துவது குறித்து ,”பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணை வியாபாரிகளும் சாமானியர்தான், அதனை வாங்கும் மக்களும் சாமானியர்கள் தான்.

எனவே தனியார் நிறுவனங்கள் அடிக்கடி பாலின் விலையை உயர்த்தினாலும், தமிழ்நாடு அரசிற்கு பாலின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை. அதன்படி தனியார் துறை பால் 1 லிட்டருக்கு 56 ரூபாய் விற்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசு ரூ 40க்கு மட்டுமே 1 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
