செம உற்சாகத்தில் இல்லத்தரசிகள்!! அதிரடியாக குறைந்த தங்கம்!!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் நகைக்கடைகளில் குவிய ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இன்றும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே சரிவை சந்தித்து வரும் தங்கம் இன்று கிராமிற்கு ரூ40 குறைந்துள்ளது .
இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ40 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5445க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.43,560 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்து வருகிறது. இன்றைய விலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ1 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.00 க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
.
வைரம் , பிளாட்டினம் என தங்கத்தை விட உயர்ந்த ஆபரணங்கள் இருந்த போதிலும் தங்கத்திற்கான மவுசே தனி தான். இந்திய அளவில் தங்கத்தின் மீதான முதலீடு பெரும் சேமிப்பு பெட்டகமாகவே இருந்து வருகிறது.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான சேமிப்பு இல்லத்தரசிகள் , முதலீட்டாளர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது அவசர, அவசிய கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக முடியும் என்பதே இதற்கு காரணம். தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு. அமெரிக்க பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த விலைகளை பார்க்கும் போது மக்களுக்கு தங்கத்தின் மீது ஒரு பயம் வருகிறது. அதனால், மக்கள் தங்கம் வாங்குவதற்கு யோசனை செய்து வருகின்றனர்.ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!