இல்லத்தரசிகள் அதிர்ச்சி... வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இன்று பெட்ரோல் டீசலுக்கு எதிரான கலால் வரி ரூ2 உயர்த்தப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி
வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. இன்றைய விலையை காட்டிலும் இனி ரூ.50 அதிகமாக செலுத்த வேண்டும். இந்த புதிய விலை நாளை (ஏப்ரல் 08, 2025) முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி (Excise Duty) 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதாவது, பெட்ரோல், டீசல் விலையை அரசு நேரடியாக உயர்த்தவில்லை என்றாலும், அவற்றின் மீதான வரியை அதிகரித்துள்ளது.இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் உயர்த்தியுள்ளனர்.
சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக இருந்தது. இப்போது ரூ.50 உயர்வு சேர்க்கப்பட்டால், புதிய விலை ரூ.868.50 ஆக இருக்கும் என்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதை இறக்குமதி செய்யும் செலவு அதிகரிக்கும். இதனால் எரிவாயு உற்பத்தி செலவும் உயர்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!