பெரும் பரபரப்பு.. மெட்ரோ ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!
டெல்லி மயூர் விஹார்-1 மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் ரயில் வருகைக்கு காத்திருந்தனர். ரயில் வந்துகொண்டிருந்தபோது கூட்டத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணையில் இறங்கினர். விசாரணையில் இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சிகிச்சையில் இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். அவரைது பெயர் அஜய் லக்ஷ்மன் பகலே என்பதும் தெரியவந்தது. பின்னர் இறப்பு குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த நபர் இந்திய எரிவாயு ஆணையத்தின் (GAIL) முன்னாள் மூத்த மேலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
தொடர்ந்து காவல் அதிகாரி விரிவாக கூறுகையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மயூர் விஹார்-1 மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் எண்.1ல் இருந்து மதியம் 1:51 மணிக்கு அந்த நபர் தானாக குதித்தது கண்டறியப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, என்று கூறினார்.
இது போன்ற சம்பவம் நடப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர் என பயணிகள் கூறுகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க