சூறாவளிக்காற்று.. புயல் சின்னம்.. பத்திரம் மக்களே... கனமழைக்கு வாய்ப்பு!
இன்று தென்-கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், தென் அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இன்று காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகலாம் என்றும், அது 24ம் தேதிக்குள் வடமேற்கு திசையில் நகர்ந்து மண்டலமாக வலுபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வலுபெறும் நிலையில், அந்த பகுதியில் “சென்யார்” என்ற பெயருடன் புயலாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவார்கள், இன்றும், நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், மழை மற்றும் இடியுடன் கூடிய சூழல்களை கருத்தில் கொண்டு வெளியே செல்லும் போது பொதுமக்கள் கவனமுடன் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
