சீக்கிரமா வீட்டுக்கு கிளம்புங்க... 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!

 
மழை


தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மழை

இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மழை

ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அரியலூர்  மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது