பகீர்!! மனைவியின் மூளையை தின்ற கணவர்!!

 
அல்வாரோ

வட அமெரிக்கா மெக்சிகோ  பியூப்லா நகரில் வசித்து வருபவர் 32 வயது அல்வாரோ .   இவரது மனைவி மரியா மான்செராட். இவர்களுக்கு 12 முதல் 23 வயதில்  5 மகள்கள் உள்ளனர். அல்வாரோ பேய், பிசாசு குறித்த கருத்தியலில் நம்பிக்கை கொண்டவர் .   இவர் தன் மனைவி மரியா மான்செராட்டைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அல்வாரோ வீட்டில் சோதனையிட்டனர்.

அமெரிக்கா போலீஸ்

அதில்  பிளாஸ்டிக் பையில் மனித உடலின் சில துண்டுகள் இருந்திருக்கின்றன. தீவிர விசாரணையில் அல்வாரோ  பல்வேறு அதிர்ச்சித் தகவலை அல்வாரோ தெரிவித்துள்ளார்.   அதில் “ ஜூலை 29ம் தேதி சாத்தான்தான் இந்தக் குற்றத்தைச் செய்ய உத்தரவு பிறப்பித்தது.   என் மனைவியைக் கொலைசெய்து, அவரது முளையை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டேன். அவரது தலை மண்டை ஓட்டை ஆஷ் ட்ரே ஆக்கி அதில் சிகரெட் சாம்பலை நிரப்பி வருகிறேன்.

அமெரிக்கா

மீதமுள்ள   உடல் பாகங்களை அந்தப் பகுதி பள்ளத்தாக்கில் போட்டிருக்கிறேன்” எனக் கூறினார்.இச்சம்பவம் குறித்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார்  மரியா அலிசியா “என் மகளின் கணவர் கோகோயின்  உட்பட போதைப்பொருள்களை எடுத்துக் கொள்பவர். அவருக்கு மனநலப் பிரச்னைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். இவர், எனது மகளை ஜூன் 29ல் கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web