கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து கணவன் தற்கொலை!! அதிர்ச்சி!!

 
ராஜேந்திரன்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அணைப்புதூர் எருமைக்காடு தோட்டம் பகுதியில் வசித்து வருபவர்  ராஜேந்திரன். ராஜேந்திரனும் அவரது மனைவியும்  அருகில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரே மகள்.

கேஸ்

இவர் கோவையில் பணிபுரிந்து வருவதால் அங்கேயே தங்கி விட்டார். கடந்த சில நாட்களாகவே  ராஜேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் இந்த தகராறு நேற்றும் நீடித்த நிலையில்  ராஜேந்திரன் மனைவி கோவையில் தங்கி பணிபுரியும் மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன், நேற்று வீட்டிலேயே   மது அருந்தி உள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ்
 
ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயில் உடல் கருகி இறந்த ராஜேந்திரனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web