கணவனுக்கு பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகள்.. அடுத்து கள்ளக்காதலனுடன் மனைவி செய்த பகீர் சம்பவம்!

 
கள்ளக்காதல்

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூரைச் சேர்ந்த வெங்காய வியாபாரி சிவ நாகராஜு (45) என்பவரைக் கொலை செய்த வழக்கில், அவரது மனைவி லட்சுமி மாதுரி (37) மற்றும் கள்ளக்காதலன் கோபி (35) ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்த லட்சுமி மாதுரிக்கு, கார் டிரைவர் கோபியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரைத் திட்டமிட்டு வெளியூருக்கு வேலைக்கு அனுப்பிவிட்டு, கோபியுடன் இவர் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கணவர் மீண்டும் ஊருக்கே வந்து தொழில் செய்யத் தொடங்கியதால், தங்களது சந்திப்பிற்கு அவர் தடையாக இருப்பதாக லட்சுமி மாதுரி கருதியுள்ளார்.

கள்ளக்காதல்

சம்பவத்தன்று இரவு கணவருக்கு ஆசையாகப் பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார். அதில் 20 தூக்க மாத்திரைகளை அரைத்துக் கலந்துள்ளார். அதைச் சாப்பிட்ட நாகராஜு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் இரவு 11:30 மணியளவில் கள்ளக்காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். கோபி நாகராஜுவின் மார்பில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொள்ள, லட்சுமி மாதுரி தலையணையால் முகத்தை அழுத்தி கணவரைக் கொலை செய்துள்ளார்.

கணவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, இருவரும் பயப்படவோ அல்லது அங்கிருந்து தப்பிக்கவோ முயலவில்லை. மாறாக அதிகாலை வரை லட்சுமி மாதுரி தனது கள்ளக்காதலனுடன் அமர்ந்து செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளார். அதன் பின்னரே கோபி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கள்ளக்காதல்

அதிகாலையில் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி லட்சுமி மாதுரி அழுது நாடகமாடியுள்ளார். இறுதிச் சடங்கின் போது நாகராஜுவின் காதில் இரத்தம் வழிந்ததும், மார்பு எலும்புகள் உடைந்திருப்பதைப் பார்த்தும் அவரது தந்தைக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் இது குறித்து புகாரளிக்க, பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத்திணறி இறந்தது உறுதியானது. லட்சுமி மாதுரியின் செல்போனை ஆய்வு செய்த போது, அவர் கோபியுடன் பேசியதும், கொலைக்குப்பின் ஆபாசப் படங்களைப் பார்த்ததும் ஆதாரங்களுடன் சிக்கியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!