பயங்கரம்... மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து தாம்போதி பாலத்தில் வீசிய கணவர்!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரலில் சாயர்புரம் அருகே பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். தாம்போதி பாலம் அடியில் அவரது உடல் வீசப்பட்டு கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவரது கணவரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள நம்மாழ்வார் நகர் 50 வீட்டில் வசித்து வருபவர் மரியசாமுவேல். இவர் வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார்.இவருக்கு 57 வயதில் ஜோஸ்பின்மேரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் திருமணமாகி மூத்த மகன் அருண்ராஜ் பெங்களூருவிலும், 2வது மகன் ஆனந்தராஜ் தென்ஆப்பிரிக்காவிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால் மரியசாமுவேல் மற்றும் அவரது மனைவி ஜோஸ்பின்மேரி ஆகியோர் மட்டும் நம்மாழ்வார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோஸ்பின்மேரி உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஜமால் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜோஸ்பின் மேரியின் கணவர் மரியசாமுவேல் வீட்டில் இல்லாமல் தலைமறைவாகி இருப்பதால் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம். உடலை மறைப்பதற்காக தாம்போதி பாலத்தின் அடியில் போட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமறைவான மரியசாமுவேலை போலீசார் சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர். இச்சம்பவம் சாயர்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!